ACJU/FRL/2020/13-230
24.08.2020
04.01.1442
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
நிர்ப்பந்த நிலையில் ஒரே மஸ்ஜிதில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜுமுஆக்கள் நடாத்துவது தொடர்பாக
கடந்த 16.06.2020 அன்று கோவிட் 19 அசாதாரண நிலையில் ஜுமுஆ நடாத்துவது தொடர்பான மார்க்க வழிகாட்டல் ஒன்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டிருந்தது. குறித்த வழிகாட்டலில், ஓர் ஊரில் பல இடங்களில் ஜுமுஆ நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்துகொள்ள முடியாதவர்கள் பத்வாப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தது.
அந்த அடிப்படையில், எந்தெந்த மஸ்ஜித்களில் சுகாதார அதிகாரிகளின் இடைவெளி பேணல் முறையை அமுல்படுத்தும் போது குறித்த நேரத்திற்கே மஸ்ஜிதுக்கு சமுகமளித்திருக்கும் அனைவரையும் அனுமதிக்க முடியாதுள்ளனவோ, அத்தகைய மஸ்ஜித்கள் குறித்த கோவிட் 19 உடைய அசாதாரண நிலையைக் கவனத்திற்கொண்டு நிர்ப்பந்தமான இந்நிலையில், இரண்டாவது ஜுமுஆவை நடாத்தும் விடயத்தில் பத்வாப் பிரிவின் துரித இலக்கத்தை 0117490420 தொடர்பு கொண்டு மார்க்க வழிகாட்டலைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
வஸ்ஸலாம்.
அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா