30.12.2020

நாளை (31.12.2020 அன்று) கொழும்பில் ஊவுது அமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று நாம் அழைக்கப்பட்டுள்ளதாக சமூக வளைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.


என்றாலும் பின்விளைவுகளையும், சுகாதார வழிகாட்டல்களையும் கருத்திற் கொண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை ஜம்இய்யா தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமாகக் கருதவில்லை. எனவே, ஊவுது அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கலந்து கொள்வதில்லை என்பதை அறிவித்துக் கொள்கின்றோம்.


எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் பாலித்து நிலைமைகளை சீராக்கித் தருவானாக.

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா