அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவு உம்மா நலன்புரி அமைப்புடன் இணைந்து பெற்றோரை இழந்த  மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வொன்று 10.11.2018 அன்று குருநாகலை டைன் ஹட் வரவேற்பு மண்டபத்தில் நடை பெற்றது. இச்செயற்திட்டத்தினூடாக சுமார் 25 பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவு உம்மா நலன்புரி அமைப்புடன் இணைந்து அனாதை மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வொன்று 06.11.2018 அன்று  சம்மாந்துரை தய்யிபா பெண்கள் அரபிக் கல்லூரியில் நடை பெற்றது. இச்செயற்திட்டத்தினூடாக சுமார் 25 பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைக் குழுவினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் “மஸ்ஜித்களை அடிப்படையாகக் கொண்ட சேவைக் குழு” (MBST) எனும் செயற்திட்டத்தில் யாழ்பாணத்தில் இயங்கி வரும் குழுவினருடன் சேர்ந்து யாழ்பாணத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக அங்குள்ள நிலவரங்களை சேகரிக்கும் நிகழ்வு ஒன்று 20.01.2018 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் சிங்கப்பூர் நாட்டில் இயங்கி வரும் அல் பலாஹ் நிறுவனத்தினரும் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா