22.03.2020
தேவையுடையோருக்கு உதவி செய்து அல்லாஹ்வின் ரஹ்மத்தை பெற்றுக் கொள்வோம்
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதை யாவரும் அறிவோம். பாதிக்கப்பட்ட அனைவரும் அவசரமாக இந்நோயிலிருந்து குணமடைய வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.
இவ்வைரஸின் பாதிப்பால் நாட்டில் பலரின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கின்றது. நாளாந்தம் உழைத்து தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவர்கள்; பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன் வரவேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.
அயலவன் பசித்திருக்க தான் மாத்திரம் வயிறு நிரம்ப புசிப்பவன் உண்மை விசுவாசியல்ல என நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனவே உணவளிப்பது என்பது இஸ்லாத்தில் பெரும் நன்மையை ஈட்டித் தரும் செயலாகும். அதேபோன்று ஸதகாக்கள் சோதனைகளை விட்டும் எம்மை பாதுகாக்கும் என்பதும் நபி மொழியாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிகமாக ஸதகாக்களில் ஈடுபடுவது சிறந்ததாகும்.
குறிப்பாக நாட்டில் பல பாகங்களிலும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதோடு நாளாந்தம் உழைத்து தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பலரின் தொழில்களும் நிறுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறானவர்கள் முறையாக இனங்காணப்பட்டு அவர்களுக்கும் உணவுகளுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
எனவே,
இவற்றுக்கான ஏற்பாடுகளை செய்கின்றவர்கள் அரசாங்கத்தின் சட்டங்களை மதித்து இவற்றுக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.
0777571876 | 0117490490 | 0771778831
COMMERCIAL BANK ALL CEYLON JAMIYYATHUL ULAMA A/C NO 1901005000 COMMERCIAL BANK BRANCH : ISLAMIC BANKING UNIT SWIFT CODE : CCEYLKLX
|
AMANA BANK ALL CEYLON JAMIYYATHUL ULAMA A/C NO 0010112110014 AMANA BANK BRANCH : MAIN BRANCH SWIFT CODE : AMNALKLX
|
குறிப்பு: ஜம்இய்யாவினால் குறித்த ஒரு சமூக சேவைக்காக சேரக்;கப்படும் பணம் குறித்த தேவை பூர்த்தி செய்யப்பட்டதன் பின் மீதமானால் அத்தொகை அது போன்றதொரு சமூக சேவைக்கு பயன்படுத்தப்படும்.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
செயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் டாக்டர் வின்யா அரியரத்ன தலைமையிலான சர்வோதயா அமைப்பின் குழுவுடன் நேற்று (17.02.2020) அன்று "மதங்களுக்கு இடையிலான உறவு மற்றும் தேசிய நல்லிணக்கத்தை வளர்ப்பது" எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயற்பாடுகள் தொடர்பாகவும், இஸ்லாம் தொடர்பான ஐயங்களுக்கான தெளிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி, கௌரவ செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் ஆகியோர் உட்பட இன்னும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா