அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிழக்குக் கிளையின் ஏற்பாட்டில் அப்பகுதியில் உள்ள 08 க்கும் மேற்பட்ட முஸ்லிம் வாலிப குழுக்களுடன் விஷேட சந்திப்பொன்றை 18/02/2018 ஆம் திகதி இரவு மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து மீதோடமுல்லை அல் அமான் ஜுமுஆப் பள்ளிவாயலில் ஏற்பாடு செய்திருந்தது.
இச்சந்திப்பில் வாலிபர்களுக்குத் தேவையான சன்மார்க்கக், கல்வி, ஒழுக்கம், தொழில் சம்பந்தப்பட்ட வழிகாட்டல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
- ஓவ்வொரு பள்ளிவாயல்களையும் மையப்படுத்தி வாலிப கமிட்டிகளை (Youth Committee) இவ்வருட ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் உருவாக்குதல்.
- ஓவ்வொரு வாலிப கமிட்டிகளும் அவர்களது பள்ளிவாயல்களை மையப்படுத்தி முழுமையான வாலிபர்களின் தரவுகளை (Database) இவ்வருட ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் சேகரித்தல்.
- போதைப் பொருட்கள் பாவைனையில் சிக்குன்டுள்ள மற்றும் அதனை விநியோகம் செய்யும் முஸ்லிம் வாலிபர்களுடைய விடயத்தில் விஷேட கவனம் செலுத்தப்படல்.
- வாலிப கமிட்டிகளின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கு தேவையான முடியுமான ஒத்துழைப்புகளையும் வளவாளர்களையும் கிளை ஜம்இய்யாவின் மூலம் வழங்குதல்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா