அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளை நடாத்திவரும் "ஈமானிய வசந்தம்" கிராமிய தஃவா நிகழ்வு

ஜூலை 12, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளை நடாத்திவரும் "ஈமானிய வசந்தம்" கிராமிய தஃவா நிகழ்வின் மூன்றாவது தொடர் குறிஞ்சாகேணி பிரதேசத்தில் நடத்தப்பட்டது. இந் நிகழ்வில் பின்வரும் நிகழ்வுகள் இடம் பெற்றது.
1. பிரதேசத்தில் உள்ள பள்ளிகளின் நிர்வாகிகள், கிராம உத்தியோத்தர், அரச அரசசார்பற்ற திணைக்கள பிரதிநிதிகள், இளைஞர் அமைப்புகள், விளையாட்டு கழகங்கள் ஆகியோர்களுடனான கலந்துரையாடல்.
2. பிரதேசத்தில் உள்ள மூன்று பாடசாலைகளிலும் ஒரே தலைப்பில் காலை நிகழ்ச்சிகள்.
3. குத்பா உரை.
4. பெண்களுக்கான பிரத்தியேக மூன்று நிகழ்ச்சிகள்.
5. ஆண்களுக்கான திறந்தவெளி உரைகள் இரண்டு.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.