10.11.2018ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான குழு மற்றும் பிரச்சாரக் குழுவின் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டத்தின் செயற்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துரை கிளைகியின் ஏற்பாட்டில் பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
04.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்பிட்டி கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான விஷேட செயலமர்வு ஒன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் 50 இற்கும் மேற்பட்ட உலமாக்கள் கலந்து கொண்டனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
12.11.2018ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான குழு மற்றும் பிரச்சாரக் குழுவின் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டத்தின் செயற்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் பெரிய ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
10.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப் பிரிவினால் நாடலாவிய ரீதியில் முன்னோடுக்கப்பட்டு வரும் மக்தப் பாடத்திட்டத்தின் திருகோணமலை நூறுல் ஹிதாயா மக்தபின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழா திருகோணமலை விக்ணேஸ்வரா மஹா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
09.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புல்மோட்டைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் இடம் பெற்றது. இதன் போது கிளையின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் 20 உலமாக்கள் கலந்து கொண்டனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
06.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டக் கிளையின் மத்திய சபைக் கூட்டம் மற்றும் தேசிய வலையமைப்பு வேலைத்திட்டத்தின் செயற்பாடுகள் பற்றிய தெளிவூட்டல் நிகழ்வும் தெளியாகொன்ன ஜும்மா மஸ்ஜிதில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் குருநாகல் மாவட்டத்தில் இயங்கி வரும் 22 கிளைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 2019 ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
06.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளையின் ஏற்பாட்டில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று முன்னால் காழி நீதிபதி கலீலுர்ரஹீம் அவர்களினால் நடாத்தப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
04.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் ஏற்பாட்டில் ஜம்இய்யாவினால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு மஸ்ஜித்களுக்கான ஆறு பேர் கொண்ட குழுவினருக்கு "வாலிபர்களுக்கு வழிகாட்டுவதன் அவசியம்" எனும் தொனிப் பொருளில் வழிகாட்டல் கருதத்தரங்கு நிகழ்வொன்று இடம் பெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
03.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் கல்விப்பிரின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட மாவட்ட அரபு மத்ரஸாக்களில் இவ்வருடம் கா.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இஸ்லாம் பாடத்திற்கான வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்வொன்று மாவட்டக் காரியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா