அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான பிரிவின் ஏற்பாட்டில் 'தேசிய உரிமைகளை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் காத்தான்குடி போன்ற இடங்களை மையமாக வைத்து அமைந்த 3 நாள் கல்விச்சுற்றுலா 17,18 மற்றும் 19 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் மரியாதைக்குரிய கரவிலகொடுவே தம்மதிலக தேரரின் தலைமையில் 5 பிக்குமார்கள் கலந்து கொண்டதோடு ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான பிரிவின் செயலாளர் அவர்களின் தலைமையில் 11 உலமாக்கள் கலந்து கொண்டனர். இலங்கையின் தேசிய மற்றும் சர்வதேச உரிமைகள், புராதனச் சின்னங்களை பார்த்து அதன் வரலாற்றை கற்பதே இக்கல்வி சுற்றுலாவின் மிக முக்கிய நோக்கமாக இருந்தது.