அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப் பிரிவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் மக்தப் பாடத்திட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு 17.11.2018 அன்று குருதலாவ ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் மக்தப் முஅல்லிம்கள், முஅல்லிமாக்கள், மக்தப் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி வாசல் நிருவாகிகள் மற்றும் நலன்விரும்பிகள் என சுமார் 375 பேர் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா