28.08.1439
15.05.2018
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
பத்வாப் பிரிவின் ரமழான் மாத விஷேட தொலைபேசிச் சேவை
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப் பிரிவினால் மக்களுக்கு நாளாந்தம் ஏற்படும் மார்க்கம் சம்பந்தமான சந்தேகங்களுக்கான தெளிவுகள் எழுத்து மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள்.
மேலும், புனித ரமழான் மாதத்தில் ஸகாத் மற்றும் நோன்பு சம்பந்தமான தெளிவுகள் மக்களுக்கு அதிகமாக ஏற்படுவதால், ரமழான் மாத விஷேட தொலை பேசிச் சேவை வழமைபோன்று இவ்வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சேவையூடாக வார நாட்களில் காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணிவரை, ஸக்காத், நோன்பு மற்றும் ஏனைய மார்க்கம் சம்பந்தமான சந்தேகங்களைக் கேட்பதற்கு பின்வரும் எமது துரித சேவையினூடாகத் தொடர்பு கௌ்ளலாம்.
துரித இலக்கம் : 0117 490 420
அஷ்-ஷைக் எம்.எம். எம். இல்யாஸ்
செயலாளர் – பத்வாக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா