2024.07.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரக் குழுவின் மாதாந்த ஒன்றுகூடலானது குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதில் ஆலிம்கள் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு குழுவின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இவ்வொன்றுகூடலில் ஜம்இய்யாவின் ஆலிம்கள் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், குழுவின் உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா, அஷ்-ஷைக் இஸட்.எம். நுஃமான், அஷ்-ஷைக் எம்.எஸ். ரியாஸ், அஷ்-ஷைக் எம்.எம்.எம். ரிஸா, அஷ்-ஷைக் டி. ஹைதர் அலி ஆகியோருடன் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
– ACJU Media –