ACJU/ULM/2023/001
2023.08.02 (1445.01.14)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரப் பிரிவினால் ஆலிம்களது பௌதீக மற்றும் லௌகீக முன்னேற்றங்கள் தொடர்பான செயற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்ற தலைப்பில் பலகட்ட பேச்சுவார்த்தைகளும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக,
1) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினூடாக அதன் அங்கத்தவர்கள் எவ்வகையான பயன்களை அடையலாம் மற்றும்
2) அங்கத்தவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம்
என்ற அடிப்படையில் ஒரு கருத்துக் கணீப்பீட்டை பெற்றுக்கொள்ள தலைமையகம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் இங்கு ஒரு விண்ணப்பப்படிவம் இணைக்கப்பட்டுள்ளது. அதில் தமது பெயரையும் தமது அங்கத்துவ இலக்கத்தையும் குறிப்பிட்டு மேலே கூறப்பட்டுள்ள இரண்டு விடயங்களிலும் தமது கருத்துக்களை அதற்கென வழங்கப்பட்டுள்ள இடத்தில் சுருக்கமாக பதிவு செய்யுமாறு ஜம்இய்யாவின் ஆலிம்கள் விவகாரப் பிரிவு அன்புடன் வேண்டிக்கொள்கிறது.
மேலும், ஆலிம்களில் தொழில் இன்றி, தொழில் வாய்ப்பை தேடிக் கொண்டிருப்பவர்களை தொழில் வழங்குனர்களுடன் இணைத்துவிடும் நோக்கில் தொழில் வங்கியொன்றை செயற்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆகவே கீழ்வரும் இணைப்பிலுள்ள விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களையும் பூர்த்தி செய்யுமாறு வேண்டிக் கொள்கின்றது.
https://forms.gle/jnPMSbWeNo7iokpFA
அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்
செயலாளர் – ஆலிம்கள் விவகாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா