2021.08.21
கொவிட்-19 இனால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாக விஷேட வழிகாட்டல் நிகழ்வொன்று ZOOM ஊடாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினால் 2021-08-19 ம் திகதியன்று (வியாழக்கிழமை) இரவு 8.30 மணி முதல் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், கொழும்பு மாவட்ட ஜம்இய்யாவின் மாவட்ட கிளை மற்றும் பிரதேசக் கிளைகளினது தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், ஏனைய உலமாக்கள், சமூக முக்கியஸ்தர்கள், பள்ளி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது வைத்தியர் அபூ ஸயீத் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.