அரபிக் கல்லூரிகளின் அதிபர்களுக்கான பயிற்சிநெறிகளை நடாத்துவது தொடர்பில் ஜம்இய்யாவில் இடம்பெற்ற கலந்துரையாடல் – அரபிக் கல்லூரிகள் விவகாரக்குழு

2024.02.05ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவினரின் வழிகாட்டலின் கீழ் ஜம்இய்யாவின் அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் கலந்துரையாடல் ஒன்று ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இவ்வொன்றுகூடலில் அரபிக் கல்லூரிகளின் அதிபர்களுக்கான பயிற்சிநெறிகளை நடத்துவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு தீர்மானங்களும் எட்டப்பட்டன.

இதில் ஜம்இய்யாவின் அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜவ்பர், துணைச் செயலாளர் அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ், குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் ஜே.ரீ. கரீம்தீன், அஷ்-ஷைக் கே.ஆர்.ஐ. ஸஅத், அஷ்-ஷைக் எம்.கே. அப்துல் பஷீர், அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். ஹபீஸ் ஆகியோருடன் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *