ACJU/ARB/2023/002
1444-12-22
2023-07-11
இலங்கையில் இயங்கி வருகின்ற அரபுக் கல்லூரிகளை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெறும் நிலைமைக்கு கொண்டு வரும் இலக்கில் அவற்றின் நிர்வாகக் கட்டமைப்பு, கல்வி, பதிவு மற்றும் பல்வேறு விடயங்களை மேம்படுத்தும் நோக்கில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவு தொடரான வழிகாட்டல்களை வழங்க உத்தேசித்துள்ளது.
இத்திட்டத்தில் இணைந்து கொள்ள அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் அடிப்படையில் இயங்கும் அனைத்து அரபுக் கல்லூரிகளையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவு அழைக்கின்றது.
எனவே இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற்று தமது பணியை மேம்படுத்த விரும்பும் அரபுக் கல்லூரிகள் பின்வரும் இணைப்பில் சென்று தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றது.
கூகுள் படிவத்தை நிரப்ப இந்த இணைப்பை பயன்படுத்தவும்:
விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள:
https://drive.google.com/file/d/1bKOsyjriVeyF541EW_9VQVi238EfpvRm/view?usp=sharing
குறிப்பு: ஆரம்ப கட்டமாக பதிவு செய்யும் முதல் 40 அரபுக் கல்லூரிகளில் இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜஃபர்
செயலாளர்- அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா