ACJU/NGS/2021/165
2021.08.07 (1442.12.27)
நம் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், சமூக சேவையாளருமான அல்ஹாஜ் இஸட்.ஏ.எம். ரிபாய் (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அன்னார் மார்க்கப்பற்றுள்ள ஒருவராகவும், பாடசாலைகளுக்கான கட்டடங்களை கட்டி கொடுப்பதன் மூலம் கல்வி பணிகளிலும், ஏழை, எளியவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுதல், அவர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் என்பவற்றை மேற்கொள்வதன் மூலம் சமூகப் பணிகளிலும் அதிகளவு ஈடுபட்ட ஒருவராகவும் இருந்துள்ளார்கள். அன்னார் சமூகத்துக்கு பல வழிகளிலும் தனது பங்களிப்பை செய்தவராவார். அன்னார் பெரும் செல்வந்தராக இருந்த போதிலும் எளிமையான வாழ்வையே கடைபிடித்தார் என்பது ஈன்டு குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களையும், தானதர்மங்களையும் அங்கீகரித்து, தவறுகளை மன்னித்து, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.
أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله
(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா