ACJU/NGS/2022/087
2022.04.08 (1443.09.06)
அகில உலக ஷாதுலிய்யத்துல் ஃபாஸிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் அஷ்ஷைக் அஜ்வத் பின் அப்துல்லாஹ் அல்ஃபாஸி அல்மக்கி அஷ்ஷாதுலி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் புனித மக்கா பைத்துல் ஃபாஸியில் கடந்த 2022.04.07 ஆம் திகதி அன்று வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார், உலகம் முழுவதும் உள்ள ஷாதுலிய்யா தரீக்காவை வழிநடாத்தக் கூடியவராக காணப்பட்டதோடு, முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக வளர்ச்சியில் பல பங்களிப்புக்களையும் செய்துள்ளார்கள். அன்னாரின் பல தலைமுறைகள் பல நூறு வருடங்களாக ஆத்மீக பணிக்காக இலங்கை வந்து போயுள்ளதோடு, அன்னாரும் பல தடவைகள் இலங்கை வந்துள்ளார்கள். இறுதியாக, 2004 ஆம் ஆண்டு இலங்கை வந்து அதன் நாலா புறங்களிலும் ஆத்மீக பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். அத்துடன், அன்னாரின் மகன் அஷ்ஷைக் முஹம்மத் அவர்கள், தனது தந்தையின் பிரதிநிதியாக 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத்தில்; இலங்கைக்கு வருகைத் தந்து தனது முரீதீன்களுக்கு உறுதிமொழி (பைஅத்) வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், மற்றும் முரீதீன்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.
أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله
(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா