அஷ்-ஷைக் எம்.காஸிம் (اللهم اغفر له وارحمه) அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/NGS/2024/402
2024.11.03 (1446.04.30)

 

கல்ஹின்னை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அஷ்-ஷைக் எம்.காஸிம் (اللهم اغفر له وارحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் கடந்த சனிக்கிழமை 2024.11.02ஆம் திகதி வபாத்தானார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

அன்னார் வெலிகம மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரியில் 1962ஆம் ஆண்டு ஆலிமாக பட்டம் பெற்று வெளியானது முதல் இறுதி மூச்சு வரை இன்னோரன்ன தஃவா மற்றும் சமூக பணிகளில் ஈடுபட்டார்கள்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான அன்னார், முன்னாள் கண்டி மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மர்ஹூம் எச். ஸலாஹுத்தீன் (பாரி) அவர்களின் சகோதரர் ஆவார்.

மேலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கல்ஹின்ன பிரதேசக் கிளையின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக இருந்ததோடு கல்ஹின்னை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் கெளரவத் தலைவராகவும் சேவையாற்றியுள்ளார்கள்.

இவ்வேளையில் அன்னாருடைய மனைவி, மக்கள், குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு சார்பிலும் அனைத்து ஆலிம்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்லாஹு தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களுடைய குற்றங் குறைகளை மன்னித்து பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக!

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *