ACJU/NGS/2024/307
2024.02.26 (1445.08.15)
மாத்தளை அந்-நஜாஹ் அரபிக் கலாசாலையின் அதிபரும் மூத்த மார்க்க அறிஞருமாகிய அஷ்-ஷைக் ஏ. எல். முஹாஜிரீன் நத்வி ஹழ்ரத் (اللهم اغفر له وارحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் ஞாயிற்றுக்கிழமை 2024.02.25ஆம் திகதி வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
நீண்ட காலம் தஃவாப் பணியில் ஈடுபட்டவரும், காலி நுழாருல் காதிரிய்யா அரபுக் கல்லூரி மற்றும் இன்னும் பல அரபுக் கல்லூரிகளின் அதிபராகவும் உஸ்தாதாகவும் நீண்ட காலம் பணியாற்றியவருமான அன்னார் இலங்கைத் திருநாட்டில் மார்க்கப் பணிகளை மேற்கொள்ளக்கூடிய பல ஆலிம்களையும் உருவாக்கியவராவார்கள்.
இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அல்லாஹு தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களுடைய குற்றங் குறைகளை மன்னித்து பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக!
أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله
“(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே! எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக!)”
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா