ACJU/NGS/2023/286
2023.12.28 (1445.06.13)
ஜுமுஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளல் சம்பந்தமாக
2023 ஆம் ஆண்டிற்கான அஹதிய்யா பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை இன்று 2023.12.28 மற்றும் 29ஆம் திகதிகளில் நாடுபூராகவும் நடாத்தப்படவுள்ளது. அதனடிப்படையில் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை தினமாக காணப்படுவதனாலும் ஜுமுஆவுக்குப் பிறகும் பரீட்சை நடைபெற உள்ளதனாலும் நாளைய தினம் ஜுமுஆ பிரசங்க நேரத்தை சுருக்கி பிற்பகல் 1.00 மணிக்கு முன்னர் முடித்துக் கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அனைத்து பள்ளிவாசல்களினதும் பொறுப்பாளர்கள், மற்றும் கதீப்மார்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கமைய பரீட்சை எழுதவுள்ள மாணவர்களது பகலுணவு, ஏனைய தேவைகளுக்கான காலநேரத்தை கருத்தில் கொண்டு இவ்வார ஜுமுஆ பிரசங்கத்தை (2023.12.29) சுருக்கமாக பிற்பகல் 1.00 மணிக்கு முன்னர் நிறைவுறும் வகையில் அமைத்துக் கொள்ளுமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.
அஷ்-ஷைக் எம்.ஜே அப்துல் ஹாலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா