2022.06.02 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான பிரிவு பிற மதத்தவர்களுடன் நல்லுறவை கட்டியெழுப்புவோம் எனும் திட்டத்தின் கீழ் இலங்கை ராமான்ன மஹா நிகாயவின் மஹாநாயக தேரர் கௌரவ மகுலேவே ஸ்ரீ விமல தேரர் அவர்களை அவர்களின் வசிப்பிடத்தில் சந்தித்தது. இக்கலந்துரையாடலுக்காக நிறைவேற்றுக் குழுச் சார்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயளாலர் அஷ்-ஷைக் எம் அர்கம் நூரமித், உதவிச் செயளாலர் எம்.எஸ்.எம் தாஸிம், நிறைவேற்று குழு உருப்பினரும் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான பிரிவின் உதவிச் செயளாலருமான அஷ் – ஷைக் பரூத் பாரூக், இன்னும் அஷ் – ஷைக் சல்மான் போன்றோர் கலந்து கொண்டனர்.