ACJU/NGS/2023/211
2023.09.06 (1445.02.22)
கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு,
எதிர்வரும் 2023.09.08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கத்தை ‘சமூக ஒற்றுமையின் முக்கியத்துவமும் அவசியமும்’ எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழு அனைத்து கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களிடம் கேட்டுக்கொள்கிறது.
‘சமூக ஒற்றுமை’ எனும் தலைப்பில் தயார் செய்யப்பட்டுள்ள மாதிரி குத்பா இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இணைப்பு:
https://drive.google.com/file/d/12tGJR1uqZ8DZ2kGBiYSEeUN0_4KVyyJV/view?usp=sharing
அல்லாஹு தஆலா எம்மனைவரையும் கருத்து மோதல்கள், காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, பகைமை பாராட்டல் போன்ற மோசமான பண்புகளிலிருந்து பாதுகாத்து ஒற்றுமையுடனும் சகோதர வாஞ்சையோடும் வாழ்ந்து மரணிக்க கிருபை செய்வானாக!
அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா