2024.07.22ஆம் திகதி, எகிப்து அரபுக் குடியரசின் 72ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு எகிப்து தூதரகத்தின் ஏற்பாட்டில் விஷேட நிகழ்வொன்று கொழும்பு ஷங்ரி லா ஹோட்டலில் உள்ள லோட்டஸ் பால்ரூம் மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கான எகிப்து தூதுவர் மாஜித் முஸ்லிஹ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் கலந்துகொண்டார்கள்.
மிக சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் வசிக்கும் வயோதிபர்களினால் கலைக் கலாச்சார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
இதில் அரசியல் பிரமுகர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
– ACJU Media –