ACJU/FRL/2023/06/297
12.04.2023
20.09.1444
லைலத்துல் கத்ர் (கண்ணியமான இரவு) என்பது ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து இரவுகளில் ஒற்றப்படையான ஓர் இரவாகும். இது ரமழான் மாதத்தின் மிக முக்கிமான ஓர் இரவாகக் கருதப்படுகின்றது.
இதன் நேரம் அன்றைய நாள் சூரிய மறைவிலிருந்து ஃபஜ்ர் உதயமாகும் வரையாகும். இது குறித்து அல்லாஹ் ஒரு தனியான ஒரு சூராவை இறக்கி (அல்-கத்ரில்) அதில் தெளிவுபடுத்தியுள்ளான்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லைலத்துல் கத்ரை அடைந்து கொள்வதற்கு மிகவம் கவனம் செலுத்தியுள்ளார்கள். மேலும், தம் தோழர்களுக்கு ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து இரவுகளில் ஒற்றப்படையான இரவுகளில் அதைத் தேடும் படி கட்டளையிட்டுள்ளதுடன், அவ்விரவில் நின்று வணங்கும்படியும் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் தாமும் இஃதிகாஃப் இருப்பதுடன் ஸஹாபாக்களையும் இஃதிகாஃப் இருக்கும்படி ஆர்வமூட்டுவார்கள். இவ்வாறு இஃதிகாஃப் இறுதிப்பத்தில் நபியவர்களின் நோக்கங்களில் மிகப்பெரும் நோக்கமாக லைலத்துல் கத்ரை அடைய வேண்டும் என்பதே கானப்பட்டுள்ளது.
ஹழ்ரத் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘ரமழானின் இறுதிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்’ என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரீ – 2017)
ஹழ்ரத் அபூ ஹுரைராஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘யார் ‘லைலத்துல் கத்ரில் (கண்ணியமிக்க இரவில்) நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழிபடுகிறாரோ அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரீ – 2014)
லைலத்துல் கத்ரில் ஓதப்படும் துஆ:
‘اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي.’
ஹழ்ரத் ஆயிஷா ரழியல்லா{ஹ அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: ‘அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று (நான்) கேட்டேன்.’ அதற்கு அவர்கள் ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு! என்று சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். (நூல்: ஸுனனுத் திர்மிதீ 3513)
ஆயிரம் மாதங்களை விட மிகச் சிறந்த இரவான லைலதுல் கத்ரை அடைந்து அதன் அனைத்துப் பாக்கியங்களையும் பெற வல்ல அல்லாஹு தஆலா நமக்க அருள் புரிவானாக!
அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் – பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா