குத்பா பிரசங்கம் – “நெருக்கடியான சூழ் நிலையில் நாம் என்ன செய்யவேண்டும்”

بسم الله الرحمن الرحيم

தலைப்பு: குத்பா பிரசங்கம் – “நெருக்கடியான சூழ் நிலையில் நாம் என்ன செய்யவேண்டும்

தயாரிப்பு: பிரசாரக் குழு – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

திகதி: 24-11-2016 / 23-02-1438

 

الحمد الله رب العالمين والصلاة والسلام على محمد وعلى آله وصحبه أجمعين !

  • அனைத்து நிகழ்வுகளும் அல்லாஹ்விடமிருந்துதான் வருகின்றன இதனை உறுதி கொள்வது ஈமானின் அடையாளமாகும்.

(مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ يَهْدِ قَلْبَهٗ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏ ( التغابن :11

நிகழும் நிகழ்வுகள் எல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் – அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். ( அத் தஙாபுன்:11)

 

  • ஒரு விசுவாசி (உண்மை முஃமின்) இக்கட்டான எந்த நிலைமைகளிலும் பயப்படவும் மாட்டான் கவலைப்படவும் மாட்டான்.

(وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ) آل عمران :139

எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.     (ஆலுஇம்ரான்:139)

 

  • உண்மைவிசுவாசிகளுக்கு அல்லாஹ்வின் உதவி வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

وكان حقا علينا نصر المؤمنين (الروم : 47)

முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்.      (அர்ரூம்:47)

 

  • பொதுவாக, நிலைமைகளில் மாற்றம் ஏற்படுவது அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதற்கே ஆகும்.

 

وَبَلَوْنَاهُم بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ (الأعراف : 168)

அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம்.     (அல் அஃராப்:168)

 

நிலைமைகள் மோசமாகின்ற பொழுது நாம் செய்யவேண்டிய  கடமைகள் பற்றி எமது மார்க்கத்தில் தெளிவான சில வழிகாட்டல்கள் கூறப்பட்டுள்ளன.

  1. தொழுகை, நோன்பு, ஸதகா மற்றும் பாவமன்னிப்பு போன்ற நல்லமல்கள் மூலம் அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வேண்டும். இதுவே நபிமார்களினதும் ஸஹாபாக்களினதும் வழிமுறையாகும்.

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ (البقرة:153 )

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(அல்லாஹ் விடம்;) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.   (அல் பகரா:153)

 

  • சிறுபான்மை சமூகமாக இருந்த பனூ இஸ்ரவேலர்களை இல்லாதொழிக்குமாறு பிர்அவ்னின் சமூகப்பிரமுகர்கள் ஆலோசனைக் கூறினர். அப்பொழுது பிர்அவ்ன் எடுத்த முடிவு பற்றியும் அந்த முடிவினால் பயந்து போன பனூ இஸ்ரவேலர்களுக்கு மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் எவ்வாறு வழிகாட்டினார்கள் என்பதைப் பற்றியும் அல் குர்ஆனில் பின் வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது.

 

وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اَتَذَرُ مُوْسٰى وَقَوْمَهٗ لِيُفْسِدُوْا فِى الْاَرْضِ وَيَذَرَكَ وَاٰلِهَتَكَ‌ ؕ قَالَ سَنُقَتِّلُ اَبْنَآءَهُمْ وَنَسْتَحْىٖ نِسَآءَهُمْ‌ ۚ وَاِنَّا فَوْقَهُمْ قَاهِرُوْنَ    (الأعراف :127)

அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) ‘மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவன், ‘(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் – நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்’ என்று கூறினான்.  (அல் அஃராப்:127)

 

قَالَ مُوْسٰى لِقَوْمِهِ اسْتَعِيْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا‌ ۚ اِنَّ الْاَرْضَ لِلّٰهِ يُوْرِثُهَا مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ (الأعراف :128(

(அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி ‘நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே! அதனை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்’ என்று கூறினார்.    (அல்அஃராப்:128)

 

قَالُـوْۤا اُوْذِيْنَا مِنْ قَبْلِ اَنْ تَاْتِيَنَا وَمِنْۢ بَعْدِ مَا جِئْتَنَا‌ ؕ قَالَ عَسٰى رَبُّكُمْ اَنْ يُّهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِى الْاَرْضِ فَيَنْظُرَ كَيْفَ تَعْمَلُوْنَ (الأعراف:129(

(அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; நீங்கள் வந்ததன் பின்னரும் (துன்புறுத்தப்பட்டே வருகின்றோம். நீங்கள் வந்ததால் எங்களுக்கு ஒன்றும் பயனேற்படவில்லை) என்று கூறினார்கள். (அதற்கு மூஸா) ‘உங்களுடைய இரச்சகன்; உங்களுடைய எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்களுடைய நடத்தை எவ்வாறு இருக்கின்றது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கின்றான்’ என்று கூறினார். (அல்அஃராப்:129)

 

  • நபி(ஸல்) அவர்களும் இக்கட்டான எல்லா நிலைமைகளிலும் தொழுகையின் பக்கமே கவனம் செலுத்துவார்கள்.

 

عن حذيفة بن اليمان رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم  إذا حزبه أمر صلى (أبو داود(

 

  • அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்புவார்களை அல்லாஹ் சந்தோஷம் அடையச் செய்வான்.

 

)وَّاَنِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ يُمَتِّعْكُمْ مَّتَاعًا حَسَنًا اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى وَ يُؤْتِ كُلَّ ذِىْ فَضْلٍ فَضْلَهٗ ‌ؕ(هود: 3)

நீங்கள் உங்கள் இரட்;சகனிடத்தில் பாவ மன்னிப்பைக் கோரி (பாவங்களை விட்டு) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால்) ஒரு குறிப்பிட்ட (நீண்ட) காலம் வரையில் உங்களை இன்பமடையச் செய்வான். (தன் கடமைக்கு) அதிகமாக நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) அதிகமாகவே கொடுப்பான்.  (ஹுத்:3)

 

  • நெருக்கடியான நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்த யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்: لا إله إلا أنت سبحان إني كنت من الظالمين  என்ற பிராத்தனையில் ஈடுபட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பிய போது அவர்களை துக்கத்திலிருந்து விடுவித்தாகவும்,  இவ்வாறே விசுவாசிகளுடன் நடந்து கொள்வதாகவும் அல்லாஹ் வாக்குறுதி அளித்திருக்கின்றான்.

فَنَادٰى فِى الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌ ۖ  ஃفَاسْتَجَبْنَا لَهٗۙ وَنَجَّيْنٰهُ مِنَ الْـغَمِّ‌ؕ وَكَذٰلِكَ نُـنْجِى الْمُؤْمِنِيْنَ‏

(الأنبياء :(87/88

(யூனுஸ் ஆகிய) அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து ‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்’ என்று பிரார்த்தித்தார்.

எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்.(அல் அன்பியா:87,88)

 

  1. பாவமான விடயங்களிருந்து எம்மையும் எமது குடும்பத்திரையும் தற்காத்துக் கொள்ள வேண்டும். அப்படி  ஏதெனும் பாவங்கள் நிகழ்ந்தாலும் உடனடியாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேட வேண்டும்.

 

பூமியில் குழப்பங்கள் வெளிப்படுவதற்கு அடிப்படைக் காரணம் மனிதர்களின் கைகள் சம்பாதித்த தீய வினைகளே ஆகும்.

وَمَاۤ اَصَابَكُمْ مِّنْ مُّصِيْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَيْدِيْكُمْ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍؕ‏ )الشورى :30(

 

அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.    (அஷ்ஷுரா:30)

 

  • உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் தனது படைத் தளபதி மன்ஸுர் இப்னு ஹாலிப் என்பவருக்கு நீண்டதொரு அறிவுரை பகர்ந்தார்கள். அதில் பின்வரும் விடயத்தையும் குறிப்பிட்டார்கள்.

 

فإن الذنوب أخوف عندي على الناس من مكيدة عدوهم وإنما نعادي عدونا وننصر عليهم بمعصيتهم ولولا ذلك لم تكن لنا قوة بهم لأن عددنا ليس كعددهم ولا عدتنا كعدتهم فلو استوينا نحن وهم في المعصية كانوا أفضل منا في القوة و العدد  (حلية الأولياء)

 

கருத்துச் சுருக்கம்: விரோதிகளுடைய சூழ்ச்சியை விட நான் மிகவும் அதிகமாகப்பயப்படுவது எமது மக்களால் நிகழும் பாவங்களையே ஆகும். விரோதிகள் அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்றார்கள் என்ற  காரணத்தினால் தான் அவர்களுக்கு எதிராக எங்களுக்கு அல்லாஹ்வின் உதவி வந்துக்கொண்டிருக்கின்றது. அவ்வாறு இல்லையெனில் அவர்களை எதிர்த்து நிற்க எங்களிடம் வேறு எந்த சக்தியும்கிடையாது. அவர்களின் எண்ணிக்கையும், ஏற்பாடுகளும், எங்களைக் காட்டிலும் அதிகமானவையாகும். நாங்களும் அவர்களும் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் சமனாகிவிட்டால் அவர்கள் தான் மிகைப்பார்கள் ஏனெனில் அவர்கள் எங்களைவிட என்ணிக்கையிலும் ஏனைய ஏற்பாடுகளிலும் மிகச் சிறந்தவர்களாக இருக்கின்றார்கள்.

  • ரோமர்கள் தோல்வியை தழுவிய பொழுது அவர்களிடம் ஹிரக்கல் மன்னன் உங்களை எதிர் கொள்ளும் முஸ்லிம் படையினர்களைப் பற்றி எனக்குக் கூறுங்கள் ஏனெனில் நீங்கள் அவர்களை விட அதிகமானவர்களாக இருக்கும் நிலையில் உங்களுக்கு ஏன் தோல்வி ஏற்படுகின்றது என்று விசாரித்தான். அப்போது ஒரு முக்கிய பிரமுகர்  பின்வருமாறு பதில் கூறினார்.

 

من أجل أنهم يقومون الليل ويصومون النهار ويوفون بالعهد ويأمرون بالمعروف وينهون عن المنكر ويتناصفون بينهم، ومن أجل أنا نشرب الخمر ونزني ونركب الحرام وننقض العهد ونغصب ونظلم ونأمر بالسخط وننهى عما يرضى الله ونفسد في الأرض.

(البداية والنهاية)

கருத்துச் சுருக்கம்: அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கின்றது. அவர்கள் இரவில் நின்று வணங்கின்றனர், பகலில் நோன்பு நோக்கின்றனர், உடன் படிக்கையை பூர்த்தி செய்கின்றனர், நன்மையை ஏவி தீமையை தடுக்கின்றனர், தங்களுக்கு மத்தியில் நீதமாக நடந்து கொள்கின்றனர். ஆனால் நாங்களே மது அருந்துகின்றோம், விபசாரம் புரிகின்றோம், தடுக்கப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றோம், உடன் படிக்கைகளை முறிக்கின்றோம், மேலும்  இப்பூமியில் குழப்பம் செய்கின்றோம், இதை கேட்ட ஹிரக்கல் மன்னர் நீர் எனக்கு உண்மையை கூறிவிட்டீர் என பதில் கூறினார்;.

 

  1. கொடுக்கல் வாங்கல் மற்றும் செயல்பாடுகள் மூலம் அந்நியமக்களுடன் நல்ல முறையில் நடந்து இஸ்லாதத்தின் உண்மை வடிவத்தை எடுத்துச் செல்வோம்.

இஸ்லாம் சாந்தியையும், சமாதானத்தையும், ஐக்கியத்தையும் விரும்பும் மார்க்கம்;. மேலும்  மனிதர்களுக்கு மாத்திரமல்ல சகல படைப்பினங்களுடனும் கருணையுடன் நடக்கும் படி கட்டளையிடும் மார்க்கம்.  இஸ்லாம் என்பதன் கருத்து சாந்தி சமாதானம் என்பதாகும்.  இந்த விடயங்களை எமது செயல் பாடுகள், நன்னடத்தைகள் மூலம் மாற்று மத சகோதர்களுக்கு  புரியவைக்கவேண்டும்.

இது சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்டிருக்கம் (சமாஜ சங்வாத) எனும் பிரசுரத்தை முடியுமான அளவு பிறசமூகங்களுக்கு கிடைக்கச்செய்ய வேண்டும்.

 

  1. நாங்கள் வாழும் நாட்டில் மனிதநேயத்தை கட்டியெழுப்பக்கூடிய, மனித விழுமியங்களை பாதுகாக்கக்கூடிய மார்க்கத்திற்கு முரண் இல்லாத அனைத்து விடயங்களிலும் பிற சமூகங்களுடன் சேர்ந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் தனது இருபதாம் ஆம் வயதில் தனது சிறிய தந்தைமார்களுடன் சேர்ந்து  حلف الفضول   என்ற ஒப்பந்தத்தில் கலந்து கொண்டார்கள்;. அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட மிக முக்கிய விடயம் யாதெனில் அனைத்து மக்களினதும்  உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் அதற்காக அனைவரும் ஒன்றினைந்து முயற்சிக்கவேண்டும்.

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிற்காலத்தில் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி நினைவு கூறும் போது இது போன்ற  ஒப்பந்ததில் கலந்து கொள்ள  இப்போது நான் தயார் என்று கூறினார்கள்.

 

  1. எங்களுக்கு மத்தியில் ஒற்றுமைப்படுவோம்.

எங்களுக்குள் சண்டையிட்;டுக்கொள்வது அல்லாஹ்வின் உதவியையும் எங்களிடமிருக்கும்; தைரியத்தையும் இல்லாமல் ஆக்கி விடும். எனவே சிறிய சிறிய விடயங்களில் எல்லாம் பிரிந்துக் கொண்டு எங்களுக்கு மத்தியில் பிரிவினை வாதத்தை உண்டாக்கும் முயற்சியில் அறவே ஈடுபடக் கூடாது.

وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌ۚ‏ )الأنفال: 46)

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்;. (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.   )அன்பால்:46)

 

  1. வீண் வதந்திகளை தவிர்ந்து கொள்வேம்

உறுதிப்படுத்தப் படாத  தகவல்களை அடுத்தவர்களுக்கு பகிர்வது பாவமாகும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்

كفي بالمرء كذبا أن يحدث بكل ما  سمع (مسلم في مقدمة صحيحه)

தான் செவிமடுக்கும் எல்லா விடயங்களையும் பிறருக்கு கூறுபவன் பொய்யன் ஆவான்.     (முஸ்லிம்)

 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ) الحجرات: 6(

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்;. பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல்ஹுஜராத் : 6)

 

  1. எங்களுக்கு கிடைத்த செய்திகளை மற்றவர்களுக்கு பகிர்வதற்கு முன்னர் உலமாக்கள், சமூகத்தின் தலைவர்கள், மற்றும் துறைசார்ந்தவர்களினது, கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

 

وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ ۖ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَىٰ أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ ۗ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا )النساء:83(

பயம் அல்லது அமைதியை பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு எட்டினால் (உடனே) அதனை (வெளியில்) கூற ஆரம்பித்து விடுகின்றனர். (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களில்(மார்க்க ஞானமுள்ள) அதிகாரமுடையவர்களிடம் தெரிவித்தால் அவர்களிருந்து அதனை ஆய்ந்து எடுப்பவர்கள் அதனை நன்கறிந்து (தக்க நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்வார்கள். )அன்னிஸா:83)

இந்த விடயங்களை கருத்தில் கொண்டு நாம் செயல் படுவோம் அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்வழி காட்டுவானாக.

ஆமீன்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *