அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் டாக்டர் வின்யா அரியரத்ன தலைமையிலான சர்வோதயா அமைப்பின் குழுவுடன் நேற்று (17.02.2020) அன்று “மதங்களுக்கு இடையிலான உறவு மற்றும் தேசிய நல்லிணக்கத்தை வளர்ப்பது” எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயற்பாடுகள் தொடர்பாகவும், இஸ்லாம் தொடர்பான ஐயங்களுக்கான தெளிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி, கௌரவ செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் ஆகியோர் உட்பட இன்னும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா