சிங்கள, தமிழ் புத்தாண்டுச் செய்தி

ACJU/NGS/2022/091

2022.04.13

இலங்கை வாழ் சிங்கள, தமிழ் மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த தினமான இப்புத்தாண்டு தினத்தை பொருளாதார ரீதியான பல கஷ்டங்கள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் கொண்டாடும் சிங்கள மற்றும் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு குறிப்பாகவும், நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாகவும் அமைதி, சந்தோஷம், சௌபாக்கியம் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.

பல்வேறு சமூகங்களை சார்ந்தவர்கள் வாழும் இந்நாட்டில் ஒருவர் மற்றவரின் மத, கலாச்சார விழுமியங்களைப் புரிந்து கொண்டு, புரிந்துணர்வுடனும் சமாதானமாகவும் நம் நாட்டு மக்கள் அனைவரும் வாழ்வதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகக் காணப்படுகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் நம் நாட்டில் காணப்படும் நெருக்கடியான நிலை நீங்கி, நம் நாட்டு மக்கள் அனைவரும் சுபீட்சமாக வாழ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.

 

அஷ்ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *