சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்திற்கு ஜம்இய்யா தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது

ACJU/NGS/2022/142

29.05.2022

 

குழந்தைகள் உட்பட இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை இந்நாட்டில் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

 

கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போன அட்டுளுகமையைச் சேர்ந்த சிறுமி பாத்திமா ஆயிஷா நேற்று சடலமாக மீட்கப்பட்ட செய்தி எம்மை பெரும் கவலையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளதோடு, சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்திற்கு ஜம்இய்யா தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.

 

குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் அவசரமாக சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் குழந்தைகள் உட்பட இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை இந்நாட்டில் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜம்இய்யா உரிய அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றது. இதுபோன்ற சம்பவங்கள் நம் நாட்டில் இதற்கு முன்னர் பல தடவைகள் நிகழ்ந்திருப்பதை நாம் அறிவோம். இது இறுதியானதாக அமைய வேண்டுமென்று நாம் பிரார்த்திப்பதோடு, இதற்குப் பின்னர் இந்நாட்டில் இதே போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

 

எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா இந்த சிறுமிக்கு அருள்பாலித்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஈருலகிலும் நலவுகளையும் இறைபொருத்தத்தையும் கொடுத்தருள்வானாக! ஆமீன்.

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *