ACJU/FTW/2018/02/323
2018.02.05 (1438.05.18)
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள் தோழர்கள் மீதும் உண்டாவதாக!
இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத காப்புறுதி முறைகளில் வட்டி போன்ற இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட பல விடயங்கள் உள்ளன. இம்முறைகளில் ஒருவர் பணம் செலுத்தி அதன் மூலம் காப்புறுதி பெறுவது இஸ்லாத்தின் பார்வையில் அனுமதிக்கப்படாத ஒன்றாகும்.
என்றாலும், அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘சுரக்ஷ’ காப்புறுதித் திட்டத்தில் பாடசாலை மாணவர்களோ அல்லது அவர்களைப் பராமரிப்பவர்களோ காப்புறுதிக்காகக் கட்டணம் செலுத்தி உடன்படிக்கை எதுவும் செய்வதில்லை. மாறாக அரசாங்கமே இதற்கென்று பணத்தை ஒதுக்கி மாணவர்களுக்காக காப்புறுதி நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கை செய்கிறது.
மேலும், இத்திட்டத்தின் படி ஒரு மாணவன் இறந்தால் அல்லது நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் அல்லது மாணவனின் பெற்றோர் இறந்தால் அதற்காக ஒரு தொகைப் பணத்தைக் குறித்த மாணவனுக்காக அரசாங்கம் காப்புறுதி நிறுவனத்தின் ஊடாக வழங்குகிறது.
எனவே, நீங்கள் குறிப்பிட்டுள்ள இவ்விடயம் யதார்த்தத்தில் அரசாங்கம் செய்யும் உபகாரமாகவே கருதப்படுவதினால் அரசாங்க உபகாரங்களைப் பெற்றுக்கொள்வதில் தவறேதுமில்லை.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்!
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் – ஃபத்வாப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா