2024.07.01ஆம் திகதி, ஜம்இய்யத்துல் உலமா-ஏ-ஹிந்தின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் மௌலானா மஹ்மூத் மதனி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டார்கள்.
சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட காலகட்டத்தில் மௌலானா மஹ்மூத் மதனி அவர்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்தபொழுது, ஜம்இய்யாவினால் மேற்கொள்ளப்பட்ட உடனடி மனிதாபிமான உதவிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகள் வழங்கிய நிகழ்வினை இச்சந்திப்பின் போது ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
அத்தோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உபகுழுக்களது இணைப்பாளர்களை நேரடியாக அறிமுகப்படுத்திய முஃப்தி ரிஸ்வி அவர்கள் உபகுழுக்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் தெளிவுகளை வழங்கினார்கள்.
இதன்போது சகவாழ்வு, ஆலிம்களது மேம்பாடு, உலகக்கல்வி மற்றும் அவர்களது வாழ்க்கையை வலுவூட்டுவதற்கான திட்டங்களை செயற்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் மௌலானா மஹ்மூத் மதனி அவர்களால் வலியுறுத்தப்பட்டது.
– ACJU Media –