ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில் இப்பாகமுவ கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இளைஞர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு

2024.08.23ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தல் மற்றும் வழிகாட்டலில், ஜம்இய்யாவின் இப்பாகமுவ கிளையின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வொன்று மெல்சிறிபுர மாஇயாவ ஜுமுஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இதில், குறித்த பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 90க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து பயன்பெற்றனர்.

இச்செயலமர்வில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

– ACJU Media –

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *