2024.03.18ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில், ஜம்இய்யாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான ரமழான் கால தர்பிய்யாஹ் நிகழ்வு கொழும்பு புதுக்கடை தாருல் அய்மன் மத்ரஸாவில் நடைபெற்றது.
இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட மத்ரஸா மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.
குறித்த நிகழ்வில் வளவாளராக ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் கலந்துகொண்டிருந்தார்.
– ACJU Media –