2024.03.01 மற்றும் 02 ஆம் திகதிகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டல்களுக்கமைய ஜம்இய்யாவின் உபகுழுக்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளை ஆகியன இணைந்து நடாத்திய ஆலிம்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு ஹம்பாந்தோட்டை பனுவல மர்கஸ் பள்ளிவாயலில் நடைபெற்றது.
இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் போதனைகளின் அடிப்படையில் வாழுகின்ற, தீனின் மேம்பாட்டிற்கும் சமூகத்தினதும் தேசத்தினதும் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்கின்ற ஒரு கட்டுக்கோப்பான முன்மாதிரிமிக்க முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதில் ஆலிம்களின் பங்களிப்புக்கள் என்ன? அதற்காக அவர்களை எவ்வாறு தயார்படுத்துவது என்ற தொனிப்பொருளை மையப்படுத்தியதாக இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதில் ஜம்இய்யாவின் சார்பில் கலந்து கொண்டவர்களும் எடுத்துக்கொண்ட தலைப்புக்களும்:
• அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர் (நிறைவேற்றுக்குழு உறுப்பினர், செயலாளர்-ஆலிம்கள் விவகாரப் பிரிவு) – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிமுகம்.
• அஷ்-ஷைக் எம். மபாஹிம் – (ஒருங்கிணைப்பாளர்-பத்வா குழு) – ஜம்இய்யாவின் உப பிரிவுகளின் செயற்பாடுகள்.
• அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா – (உப செயலாளர்-ஆலிம்கள் விவகாரப் பிரிவு) – ஆன்மீக வழிகாட்டல்கள்.
• அஷ்-ஷைக் எம். ஹாரிஸ் ரஷாதி – இஸ்லாமும் ஆரோக்கியமும்.
• அஷ்-ஷைக் எம். நிஜாம் – வெற்றிகரமான ஆசிரியர் மற்றும் இமாம்.
• சகோதரர் ரம்ஸி (துணை ஒருங்கிணைப்பாளர்-இளைஞர் விவகாரப் பிரிவு) – வாலிபர்களை கையாளும் முறைமைகள்.
• அஷ்-ஷைக் ஸல்மான் (இணைப்பாளர்-ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு) – தேசிய வலையமைப்பு திட்டத்திற்கான வேலைத் திட்டங்கள்.
இந்நிகழ்வில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள 85இற்கும் மேற்பட்ட ஆலிம்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
– ACJU Media –