ஜம்இய்யாவின் உயர்கல்விக் குழு மற்றும் AUMSA வின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேல் மாகாண பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களுக்கான அந்-நஸீஹா-மார்க்க நல்லுபதேச நிகழ்ச்சிகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர் கல்விக் குழுவின் வழிகாட்டலில் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் (AUMSA) ஏற்பாட்டில், இலங்கையின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியினை தொடரும் மாணவர்களுக்கான அந்-நஸீஹா-ஆன்மீக வழிகாட்டல் நிகழ்ச்சிகள் ZOOM தொழிநுட்பம் வாயிலாக நடைபெற்றன.

01. 2024.05.14ஆம் திகதி களனி பல்கலைக்கழகம் மற்றும் கம்பஹா விக்ரமராச்சி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்கும் மாணவர்களுக்கான அந்-நஸீஹா ஆன்மீக வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்கள். இதில் சுமார் 120 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.

 

02. 2024.05.15ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான அந்-நஸீஹா ஆன்மீக வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஜம்இய்யாவின் உயர்கல்வி மற்றும் இளைஞர் விவகாரக் குழுக்களின் பிரதம இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டிருந்தார்கள். இந்நிகழ்வில் சுமார் 140 மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

– ACJU Media –

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *