அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர் கல்விக் குழுவின் வழிகாட்டலில் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் (AUMSA) ஏற்பாட்டில், இலங்கையின் வடபிராந்தியத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியினை தொடரும் மாணவர்களுக்கான அந்-நஸீஹா-ஆன்மீக வழிகாட்டல் நிகழ்ச்சிகள் ZOOM தொழிநுட்பம் வாயிலாக நடைபெற்றன.
01) 2024.04.30ஆம் திகதி, இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கான அந்-நஸீஹா ஆன்மீக வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரம் மற்றும் உயர்கல்விக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்கள். இதில் 67க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.
02) 2024.05.01ஆம் திகதி இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆன்மீக வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜம்இய்யாவின் ஃபத்வா குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்கள். இந்நிகழ்வில் குறித்த பல்கலைக்கழகத்தின் சுமார் 85 மாணவர்கள் கலந்து பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
03) 2024.05.08ஆம் திகதி இலங்கை வவுனியா பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆன்மீக வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வளவாளராக ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். இந்நிகழ்வில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
– ACJU Media –