2024.02.07ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர் கல்விக் குழுவின் வழிகாட்டலில் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் (AUMSA) ஏற்பாட்டில் இலங்கையின் தென் பிராந்தியத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியினை தொடரும் மாணவர்களுக்கான அந்-நஸீஹா-ஆன்மீக வழிகாட்டல் நிகழ்ச்சி ZOOM தொழிநுட்பம் வாயிலாக நடாத்தப்பட்டது.
இதில் சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் ருஹுனு பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்கள் ஆகியவற்றில் கற்கும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் வளவாளராக ஜம்இய்யாவின் பத்வாப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உரைநிகழ்த்தினார்கள்.
– ACJU Media –