ஜம்இய்யாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவினர் களனி பல்கலைக்கழகத்திற்கு சிநேகபூர்வ விஜயம்

2023.12.21ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவினர் களனி பல்கலைக்கழகத்திற்கு சிநேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.

குறித்த விஜயத்தில் ஜம்இய்யாவின் பிரதிநிதிகள்; களனி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் 09 பீடங்களின் பீடாதிபதியுமான பேராசிரியர் நிலாந்தி டி சில்வா அவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் ஜம்இய்யாவின் ஏனைய வெளியீடுகளையும் உத்தியோகபூர்வமாக அவரிடம் கையளித்தனர்.

இதில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் துணைச் செயலாளருமான அஷ்-ஷைக் எம். பாஸில் பாரூக், குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான் மற்றும் உறுப்பினர் அஷ்-ஷைக் இர்ஷாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

-ACJU Media-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *