ஜம்இய்யாவின் குருணாகல், மட்டக்களப்பு, கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற அரபிக் கல்லூரிகளின் உஸ்தாத்மார்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சி

2023 டிசம்பர் மாதம் 07, 08, 09, 10 ஆகிய திகதிகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் மாவட்டக் கிளைகளின் ஏற்பாட்டில் அந்தந்த மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரபுக்கல்லூரிகளின் உஸ்தாத்மார்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சிகள் ஜம்இய்யாவினால் நடத்தப்பட்டன.

அந்தவகையில் 07ஆம் திகதி ஜம்இய்யாவின் குருணாகல் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் குருணாகல் மாவட்டத்தை மையப்படுத்திய அரபிக் கல்லூரிகளின் உஸ்தாத்மார்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சி சியம்பலாகஸ்கொட்டுவ அந்-நூர் அரபிக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குருணாகல் மாவட்டத்திலுள்ள 21 அரபிக்கல்லூரிகளில் இருந்து 43 உஸ்தாத்மார்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அதேபோன்று ஜம்இய்யாவின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்திய அரபுக்கல்லூரிகளின் உஸ்தாத்மார்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சி கடந்த 08 ஆம் திகதி ஜம்இய்யாவின் ஏறாவூர் கிளைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள, 17 அரபிக்கல்லூரிகளில் இருந்து 45 உஸ்தாத்மார்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மறுநாள் 09 ஆம் திகதி ஜம்இய்யாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டத்தை மையப்படுத்திய அரபுக்கல்லூரிகளின் உஸ்தாத்மார்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சி கண்டி கட்டுகல புர்கானிய்யா அரபிக் கல்லூரி கேட்போர்கூடத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் கண்டி மாவட்டம், மத்தளை, நுவரலியா மாவட்டம் ஆகியவற்றிலுள்ள 31 அரபிக்கல்லூரிகளில் இருந்து 55 உஸ்தாத்மார்கள் கலந்துகொண்டிருந்தனர். ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உப தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன் ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக ஜம்இய்யாவின் கம்பஹா மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய  மாவட்டங்களை மையப்படுத்திய அரபுக்கல்லூரிகளின் உஸ்தாத்மார்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சி வத்தளை அல்-பத்ரிய்யாஹ் ஜுமுஆ மஸ்ஜிதில் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள 12 அரபிக் கல்லூரிகளில் இருந்து 21 உஸ்தாத்மார்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இவ்வெவ்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த அரபிக் கல்லூரிகளின் உஸ்தாத்மார்களுக்கு தமிழ்நாடு ஜாமியா இல்மிய்யா அறிவியல் மற்றும் ஆய்வு அரபிக் கல்லூரியின் நிறுவனர் அஷ்-ஷைக் மௌலானா டாக்டர் கலீல் அஹ்மது (முனீரி) அவர்களினால் வலுவூட்டல் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

குறித்த நிகழ்வுகளில் ஜம்இய்யா சார்பில் உப செயலாளர் அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாஸில் ஹுமைதி, அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜஃபர் மற்றும் குழுவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ், உறுப்பினர்களான அஷ்-ஷைக் கே.ஆர்.ஐ. ஸஅத், அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ், அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ஜவ்பர்தீன் மற்றும் அஷ்-ஷைக் எம்.என்.எம். மாஸின் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

– ACJU Media –

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *