ஜம்இய்யாவின் பிரச்சாரக் குழுவின் வழிகாட்டலில் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுமக்களுக்கான மார்க்க வழிகாட்டல் நிகழ்ச்சிகள்

2024.03.01ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழுவின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கான மார்க்க வழிகாட்டல் நிகழ்ச்சிகள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளிவாயல்களில் நடைபெற்றன.

அன்றைய வெள்ளிக்கிழமை குறித்த மாவட்டத்தின் ஜுமுஆ மஸ்ஜிதுகளில் நிகழ்த்தப்பட்ட குத்பாக்களில் ‘சிறார்களுக்கான குர்ஆன் கல்வியின் அவசியம்’ எனும் தலைப்பில் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டதோடு அஸர் தொழுகையின் பின்னர் ‘ரமழானை வரவேற்போம்’ எனும் தலைப்பிலும் விஷேட பயான் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.

 

இதில் ஜம்இய்யா சார்பில் கலந்து கொண்டவர்கள்:

  • அஷ்-ஷைக் என்.எம். ஷைபுல்லாஹ் – நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் மபாஹிம் – பத்வா குழுவின் இணைப்பாளர்
  • அஷ்-ஷைக் நுஸ்ரத் – இளைஞர் விவகாரக்குழுவின் இணைப்பாளர்
  • அஷ்-ஷைக் அர்ஷாத் – இளைஞர் விவகாரக்குழுவின் உறுப்பினர்
  • அஷ்-ஷைக் ஸல்மான் – ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் இணைப்பாளர்
  • அஷ்-ஷைக் முஃப்தி மின்ஹாஜ் – ஆய்வு மற்றும் வெளியீட்டுக்குழுவின் இணைப்பாளர்
  • அஷ்-ஷைக் சிராஜ்
  • அஷ்-ஷைக் முஃப்தி இர்ஷாத்
  • அஷ்-ஷைக் நஜாத்
  • அஷ்-ஷைக் பஸால் – பிரச்சாரக்குழுவின் இணைப்பாளர்

 

– ACJU Media –

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *