2023.10.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வேண்டுகோளுக்கிணங்க பொரளை ஜுமுஆ மஸ்ஜித் மற்றும் நிதா பௌண்டேஷன் ஏற்பாட்டில், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கிய பிக்குனி சங்க சர்வதேச அமைப்பு மற்றும் சிறீ சங்கமித்த பௌண்டேஷன் ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் உட்பட பௌத்த மகளிர் மதத்தலைவர்கள், இலங்கை பிராம குமாரி அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பிக்குனி சங்க மற்றும் சமூக ஆர்வலர்கள் குழுவொன்று பொரளை ஜுமுஆ மஸ்ஜித் மற்றும் அதன் நல்லிணக்க மையத்துக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டார்கள்.
இக்கலாசார நிகழ்வில் மஸ்ஜித் உள்ளே இடம்பெறும் மார்க்க கிரியைகள், வழிபாட்டு முறைகள் விளங்கப்படுத்தப்பட்டதோடு இஸ்லாத்தின் விழுமியங்கள் மற்றும் மத்ரஸா தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டன.