2024.03.20ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் கொழும்பு வடக்கு கிளையின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான ரமழான் கால தர்பிய்யாஹ் நிகழ்வு கொழும்பு-நவகம்புர மஸ்ஜிதுல் உமரில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் குறித்த பிரதேசத்திலிருந்து 80க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இதில் வளவாளராக ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப்பிரிவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் அவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-ACJU Media –