2024.03.07ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, யுனிசெப் நிறுவனம் மற்றும் சர்வோதய ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடாத்திய நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 30 உலமாக்களுக்கான ஒரு நாள் செயலமர்வு ‘The Ocean Colombo’ ஹோட்டலில் நடைபெற்றது.
‘சிறுவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இச்செயலமர்வில் சிறுவர்களது உள ஆரோக்கியம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.
இச் செயலமர்வில் வளவாளர்களாக ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், சகோதரர் மிஹ்லார், விஷேட மனநல மருத்துவ நிபுணர் வைத்தியர். கடம்பநாதன், ‘அரிகாட்டோ இன்டெர்னஷனல்’ நிறுவனம் சார்பில் சகோதரர் சுஜித் மற்றும் சுவாமி குணாதிதானந்தா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தார்.
– ACJU Media –