தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகளுக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு

2023.10.04 ஆம் திகதி ஜம்இய்யாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் ஏற்பாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் பிரதிநிதிகள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் தேசிய ரீதியில் ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இதுவரை காலமும் எவ்வாறான முன்னெடுப்புக்களையும், வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டு வந்திருக்கிறது என்பது தொடர்பில் வருகை தந்திருந்த பிரதிநிதிகள் முன்னிலையில் விரிவாவான முறையில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் எதிர்காலங்களில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியம் பற்றியும் அதற்காக எவ்வாறான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் சார்பில் அதன் பொது தலைவர் தீப்தி லமஹேவா, துணைத் தலைவர் சந்துணி ஆரியவன்ச, மற்றும் துணை இயக்குனர்களான சுசாந்த குமார, சந்துன் லக்மல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஜம்இய்யாவின் தலைமையகம் சார்பில் தலைவர் அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் துணைச் செயலாளர்களான அஷ்ஷைக் எம்.எம்.எம். முர்ஸித், அஷ்ஷைக் எம்.எப்.எம். பாழில் பாரூக், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் இணைப்பாளர் அஷ்ஷைக் ஸல்மான் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜம்இய்யாவின் உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *