ஊடக அறிக்கை
08.12.2020
கொவிட்-19 இரண்டாவது அலையின் காரணமாக கொழுப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரன உதவித் திட்டங்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பங்களிப்புடனும் கொழும்பு மாவட்ட ஜம்இய்யா மற்றும் கொழுப்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் இணைந்து செய்வதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதனுடைய வேலைத்திட்டங்கள் மற்றும் நிவாரன உதவிகள் தற்போதைய நாட்டு நிலவரங்களை கவனத்திற் கொண்டு அமைதியாகவும் நிதானமாகவும் நடைப்பெற்றுக்கொண்டு இருக்கின்றன.
இத்திட்டத்தின் மூலம் கொழும்பு வாழ் பாதிக்கப்பட்டவர்களில் 60 வீதமான மக்களுக்கான நிவாரன உதவிகள் தான் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
இதன் ஒரு கட்டமாக நேற்று (07.12.2020) கொழும்பு ஸ்டேடியம்கம மக்களுக்கான நிவாரன உதவிகள் அங்கு வழங்கி வைக்கப்பட்டன.
மேலதிக தேவைகளும் இருக்கும் பட்சத்தில் நல்லுள்ளம் படைத்த வசதியுடையவர்கள் இவ்விடயத்தில் முன்வந்து கஷ்டத்தில் இருப்பவர்களை இனங்கன்டு தங்களது உயர்ந்த கொடையினை அம்மக்களுக்கு வழங்க முன்வருமாறு தயவாய் வேண்டிக் கொள்கிறோம்.
குறிப்பு : ஏனைய அமைப்பு ரீதியாக மற்றும் தனிப்பட்ட முறையில் உதவி செய்யக்கூடியவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவை பிரிவினை அல்லது கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனத்தை தொடர்புகொள்வதன் மூலம் ஒரே இடத்திற்கு இரு முறை வழங்கப்படுவதை தவிர்த்துக் கொள்ள முடியுமாவதுடன் இதுவரை நிவாரன உதவிகள் பெறாதவர்களை இனங்கன்டு அதை முறையாக அவர்களுக்கு வழங்க அது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதையும் கவனத்திற் கொள்ளவும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவை பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் பவாஸ் : 0777571876
கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனத்தின் செயலாளர்
அல்ஹாஜ் எம். மிஸாதிக் : 0777307292