25.05.2017 / 28.08.1438
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
பத்வாப் பிரிவின் ரமழான் மாத விஷேட சேவை
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கீழ் இயங்கி வரும் 15 பிரிவுகளில் பத்வாப் பிரிவு முக்கிய இடத்தை வகிக்கின்றது. இப்பிரிவின் மூலம் மக்களுக்கு நாளாந்தம் ஏற்படும் மார்க்கம் சம்பந்தமான சந்தேகங்களுக்கான தெளிவுகள் எழுத்து மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். சிலர் நேரடியாக சமுகமளித்து தமக்கு ஏற்படுகின்ற மார்க்க சம்பந்தமான பிரச்சினைகளுக்கான தெளிவுகளைக் கேட்டறிந்து கொள்கின்றனர்.
கடந்த இரு வருடங்களைப் போன்று புனித ரமழானை முன்னிட்டு ஸகாத் மற்றும் நோன்பு சம்பந்தமான தெளிவுகளை மக்களுக்கு வழங்குவதற்கான விசேட பத்வா சேவையை ஜம்இய்யாவின் பத்வாப் பிரிவு இவ்வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சேவை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
துரித இலக்கம் : 0117 490 420
மின் அஞ்ஞல் : fatwa@acju.lk
அஷ்-ஷைக் எம்.எம். எம். இல்யாஸ்
செயலாளர் – பத்வாக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா