1441-07-02
2020-02-27
இந்நாட்களில் உலகின் பல பாகங்களிலும் பல்வேறு விதமான அனர்த்தங்கள் பரந்துகொண்டிருக்கின்றன. பயங்கரமான ஆட்கொல்லி நோயால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே இந்தியாவில் ஏற்பட்டுள்ள இன வன்செயலால் பெரும்தொகையான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வரட்சியும் கடுமையாகவே இருப்பதால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலமைகளை மாற்றியமைக்க எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவால் மாத்திரமே முடியும் அவனிடமே நாம் இந்நிலைகளை மாற்றியமைக்க மன்றாட வேண்டியுள்ளது.
எனவே நாளை ஜும்ஆ கொத்பாவில் இந்த அசாதாரண நிலமைகள் நீங்கவும் வரட்சி நீங்கி செழிப்பு ஏற்படவும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள துரதிஷ்ட நிலமைகள் மாறவும் துஆக்களில் ஈடுபடுமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா