11.12.2018 அன்று பிரிகேடியர் அஸாட் இஸ்ஸடீன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உமலாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் அடுத்த வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வு சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக், உப தலைவர்களான அஷ்-ஷைக் எஸ்.எச் ஆதம் பாவா, அஷ்-ஷைக் ஐ.எல்.எம் ஹாஷிம் ஷூரி மற்றும் இளைஞர் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் அர்க்கம் நூரமீத் ஆகியோரும், இளைஞர் விவகாரப் பிரிவின் தலைமையக செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா