“புரைவி” புயல் தாக்கம் பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டுதல்

02.12.2020

“புரைவி” புயல் இலங்கையின் கிழக்குக் கரையை இன்று இரவு ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். (الله أعلم)

புயலின் தாக்கத்திற்கு முகம் கொடுக்கும் வகையில் முன்னாயத்த நடவடிக்கையாக மீனவர்களும் கடற்படையினரும் கிழக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் ஷரீஆவின் வழிகாட்டலின் அடிப்படையில் கீழ்க்காணும் துஆவை ஓதிக் கொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

 

கடும் காற்று வீசும் போது :

(اللَّهُمَّ إِني أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وخَيْرَ مَا أُرسِلَتْ بِهِ، وَأَعُوذُ بك مِنْ شَرِّهَا، وَشَرِّ ما فِيها، وَشَرِّ ما أُرسِلَت بِهِ  (رواه مسلم)

யா அல்லாஹ்! இந்த காற்றின் நன்மையையும், இதிலுள்ள நன்மையையும், எதனை கொண்டு இந்த காற்று அனுப்பப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உன்னிடத்தில் கேட்கிறேன். இந்த காற்றின் தீமையை விட்டும், இதிலுள்ளதின் தீமையை விட்டும் எதனை கொண்டு இந்த காற்று அனுப்பப்பட்டதோ அதன் தீமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். (முஸ்லிம்)

 

கடும் மழையின் போது :

(اَللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اَللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ وَبُطُوْنِ الْأوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَر (متفق عليه

யா அல்லாஹ்! எங்கள் மீதல்லாமல் எங்களை சுற்றி (மழையை பொழியச் செய்வாயாக), யா அல்லாஹ்! பீடபூமிகள் மீதும் மலைகுன்றுகள் மீதும் பள்ளத்தாக்குகள் மீதும் தாவரங்கள் முளைக்கும் இடங்கள் மீதும் (மழையை பொழியச் செய்வாயாக) (புகாரி, முஸ்லிம்)

இச்சந்தர்ப்பத்தில் மக்கள் துஆக்கள் மற்றும் இஸ்திஃபாரில் ஈடுபடுமாறும் இப்புயலின் தாக்கத்திலிருந்து நாட்டின் சகல இன மக்களும் பாதுகாப்படைய பிரார்த்திக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகலரையும் வேண்டிக் கொள்கிறது.

 

………………………………
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *