பேராசிரியர் ஏ.ஜி. ஹுஸைன் இஸ்மாயீல் அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/NGS/2021/231

2021.10.15 (1443.03.08)

 

நம் தாய்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக இறுதி வரை பங்காற்றிய பேருவலயைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.ஜி. ஹுஸைன் இஸ்மாயீல் (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் அகில இலங்கை கல்வி மாநாட்டின் தலைவராகவும் அதிகமான காலம் சேவை செய்ததோடு, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இரண்டு தடவைகள் கடமை புரிந்து இந்நாட்டின் கல்வி மேம்பாட்டிற்கு பாரிய பங்களிப்புக்களைச் செய்துள்ளார்கள்.

மேலும், அன்னார் மலேசியாவில் காணப்படும் மலாயா பல்கலைக்கழகத்திலும் இஸ்லாமிய கலைகளுக்கான பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராக கடமை புரிந்துள்ளார்கள். அத்துடன் தர்கா நகரில் அமைந்திருக்கும் ‘இஷாஅத்துல் இஸ்லாம்’ அனாதை இல்லத்தின் பொதுச் செயலாளராகவும் சுமார் 30 வருடங்கள் பணியாற்றியுள்ளார்கள்.

பொதுச் சேவைகள் ஆணையத்தின் (Public Service Commission) உறுப்பினராகவும், தேசிய கல்வி ஆணைக்குழுவின் (National Education Commission) உறுப்பினராகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அன்னாரின் மரணம் நம் நாட்டின் கல்விச் சமூகத்திற்கு பேரிழப்பாகும்.

இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, தவறுகளை மன்னித்து, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله

(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *