“மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” நூல் அறிமுக நிகழ்ச்சி

2020.09.29 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழு மற்றும் ஆலிம்கள் விவகாரக் குழுவின் ஏற்பாட்டில் “மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி புதுக்கடை மீரானியா ஜுமுஆ மஸ்ஜிதில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்றது. இதில் இலங்கை அரபுக் கல்லூரிகள் சம்மேளனத்தின் 8 பிராந்தியத்திலிருந்து அதன் ஒருங்கிணைப்பாளர் உட்பட 3 பேர் விகிதமும் கொழும்பு மாவட்டத்திலுள்ள அரபுக் கல்லூரிகளிலிருந்து 2 உஸ்தாத்மார்கள் விகிதமும் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் 4 பிரதேசக் கிளைகளிலிருந்து 3 உலமாக்கள் விகிதமும் அழைக்கப்பட்டனர். இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உப தலைவர்களில் ஒருவரான அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் ஹாலிக் மற்றும் இளைஞர் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்ஷைக் அர்கம் நூராமித் அவர்கள் கலந்துகொண்டனர். மேலும், வருகைத் தந்த அனைவருக்கும் நூலின் இலவச பிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *